ரூ.91 கோடி முதலீட்டைப் பெற்ற ரிஸால்வ்.ஏஐ நிறுவனம்

ரூ.91 கோடி முதலீட்டைப் பெற்ற ரிஸால்வ்.ஏஐ நிறுவனம்

பிரபல செயற்கை நுண்ணறிவு சேவை நிறுவனமான ரிஸால்வ்.ஏஐ, ரூ.91 கோடி அளவுக்கு முதலீட்டு நிதி திரட்டியிருக்கிறது. எஸ்.ஐ.ஜி. வெஞ்சர்ஸ் தலைமையிலான நிறுவனங்கள் இந்நிதியை முதலீடு செய்திருக்கின்றன.

தனது வாடிக்கையாளர்களுக்கு சாட் ஜிபிடி போன்ற ஒரு சேவையை வழங்குவதற்காக இந்நிதியை அந்நிறுவனம் பயன்படுத்த இருக்கிறது.

அமெரிக்காவில் 2017ல் இந்தியர்களால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டுவரும் ரிஸால்வ், கூகிள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் அளிக்கும் ஊழியர்களுக்கான  சேவை சார்ந்த மென்பொருட்களை மேம்படுத்த இருப்பதாகத் தெரிகிறது.

பிரபல முதலீட்டு ஆலோசனை நிறுவனமான வேதா கார்ப்பரேட் அட்வைஸர்ஸ் குழுமம், இம்முதலீட்டைப் பெற்றுத்தருவதற்கான சேவைகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

-முகில்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *