தங்க நகை வணிகத்தைப் பொறுத்தவரை, மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் , ஜோய் ஆலுக்காஸ் , கான்ஸ், ஜவ்ஹரா ஆகியவை ஐக்கிய அரபு நாடுகளில் ஏற்கனவே சொந்தமான கடைகளையும் கொண்டிருக்கும் சில பிராண்டுகள் ஆகும்.
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தை சேர்ந்த தனிஷ்க், தங்களின் சொந்த ஷோரூமை ஐக்கிய அரபு நாடுகளில் திறந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தற்போது ஒரு விரிவாக்க முயற்சியாக ஒரு புதிய அணுகுமுறையை கையாண்டியிருக்கிறது.
டாடா குழுமத்தின் சொந்த நிறுவனமான தனிஷ்க் , துபாயின் சில்லரை விற்பனை நிறுவனத்தை உரிமை பங்குதாரராக ஒப்பந்தம் செய்து வளைகுடாவில் புதிய கடைகளை திறந்திருக்கிறது.
“உண்மையில், தனிஷ்க் துபாய் சந்தையில் காலடி எடுத்து வைக்கும் முன்பே தனது பிராண்டுக்கு நேரடியாகக் கடைகளை சொந்தமாக்கி கொண்டது. புதிய களத்தில் தன் கால் பதிக்கும்பொழுது கிடைக்கும் முதல் அனுபவம் மிகவும் முக்கியமானது. அதை பெறுவதற்கே விற்பனை நிலையங்களின் உரிமையை முதலில் கைவசப்படுத்தியது.
அதன் பின்னர் விரிவாக்க கட்டத்தில் கூட்டாளிகளாக சில்லறை வர்த்தகரான ஷரஃப் ரீடெயில்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. “தன்மூலம், அப்பகுதியின் வியாபார நிலவரம் மற்றும் வர்த்தக வழிமுறையை சீராக புரிந்துகொண்டு தன் இருப்பை வலுவாக்க உதவியாக இருக்கும்” என்கிறார் டைட்டன் நிறுவனத்தின் சர்வதேச வணிக பிரிவின் தலைமை நிர்வாக அலுவலர் குருவில்லா மார்கோஸ்.
தனிஷ்க்கின் தனித்துவமான நகைகள், ஐக்கிய அரபு நாடுகளான அபுதாபி மற்றும் ஷார்ஜாவின் விற்பனை நிலையங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விற்கப்பட்டு வருகின்றது . இருப்பினும், 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் துபாயில் சொந்தமான தனித்தியங்கும் ஷோரூம்களை விரிவாக்க முயற்சியாக மேற்கொண்டது.
“தங்க நகை வியாபாரம் என்பது உயர்ந்த வளர்ச்சி காணும் சந்தையாகும். மேலும் இந்த துறையில் பலதரப்பட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் குழுவான நாங்கள்(ஷரஃப் ரீடெயில்ஸ் ), இந்தியாவின் நம்பகமான டாடா குழுமத்தின் முன்னணி நகைக்கடை நிறுவனமான தனிஷ்க் உடன் கூட்டாளியாக கைக்கோர்ப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி ” என்கிறார் ஷரஃப் குழுமத்தின் துணைத் தலைவர் ஷராஃபுதீன் ஷரஃப்.