- சென்னை, நவ.15: பிராங்க்ளின் டெம்பிள்டன் பரஸ்பர நிதி நிறுவனம், ’பிராங்க்ளின் இந்தியா மல்டி ஃபேக்டர் ஃபண்ட்’ எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. முதலீட்டாளர்களின் இடர்களைக் குறைப்பதற்காகவும் வெவ்வேறு முதலீட்டு முறைகளில் உள்ள ஆதாயங்களை விடுபடாமல் வாடிக்கையாளருக்குப் பெற்றுத்தருவதற்காகவும் பல்முனை முதலீட்டை இந்நிதி செய்யும்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.5000. இம்மாதம் 24 ஆம் தேதிவரை இதில் முதலீடு செய்ய பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.





