நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்!

நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்!

கொரொனா நோய் வந்தாலும் வந்தது, ஒட்டுமொத்த உலகின் பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. சிறு தொழில் நிறுவனங்கள் இந்த மூன்று மாத நெருக்கடியையே தாள முடியாமல் அரசின் கையை எதிர்பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டன.

தினக்கூலித் தொழிலாளர்கள் நிலை இன்னும் மோசமாகியிருக்கிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பழைய நிலை திரும்ப பல மாதங்கள் பிடிக்கும். அதுவரை தொழில் முனைவோரும் ஊழியர்களும் நம்பிக்கையோடு உழைத்தால் பழைய நிலையை மீட்டுக் கொண்டுவரலாம்.

இவ்வேளையில் பல நிறுவனங்களும் ஆட்குறைப்பு, சம்பளக்குறைப்பு என்று சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன. இதனால் ஊழியர்களும் உடல் உழைப்புத்தொழிலாளர்களும் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கின்றனர். வேலையிழப்பால் தவிக்கும் ஊழியர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பை வேறு எந்த நிறுவனங்களில் தேட முடியும்? அதுவும் எல்லா நிறுவனங்களிலும் ஆளெடுப்பு நடக்காதபோது?

என்னைக்கேட்டால்  இதுபோன்ற நெருக்கடி நிலையில் தொழில் முனைவோர் தங்களை நம்பியிருக்கும் ஊழியர்களைக் கைவிடக்கூடாது. மாறாக, நம்பிக்கையளித்து அவர்களைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும். தன்னைக் கைவிடாத முதலாளியைத்தொழிலாளியும் எந்த சூழலிலும் கைவிடமாட்டான். விசுவாசம் என்ற சொல் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, முதலாளிக்கும் உரியதுதான்.

தொழில் முனைவோரும் ஊழியர்களும் சேர்ந்து உழைத்து, நிறுவனத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவர உழைக்க வேண்டிய தருணம் இது. எனவே, ஒருபோதும் மனம் தளரக்கூடாது. அதேபோல ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மனம் உடைந்து போய்விடவேண்டியதில்லை.  தன்னம்பிக்கையுடன் அடுத்த வேலைவாய்ப்பைத் தேட வேண்டும்.  வாய்ப்பு இருப்போர் சொந்தத்தொழில் தொடங்குவதுபற்றியும் யோசிக்கலாம். அரசு, புதிய தொழில்முனைவோருக்குப் பல்வேறு சலுகைகளை அறிவித்துவருவதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த கால கட்டம் எல்லோருக்கும் சவால்தான். ஆனால் மனித இனம் பல்வேறு சவால்களைக்கடந்தே இன்றைய நாகரீகத்துக்கு வந்திருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். எல்லாம் மாறும்.

நம்பிக்கையுடன் முன்னேறுவோம்!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *