- இணையவழி கடன் வழங்கும் நிறுவனமான ஃபினேபிள், டிவிஎஸ் கேப்பிடல், ஸீ47 (Z47) நிறுவனங்களிடமிருந்து சுமார் ரூ.500 கோடி பங்கு முதலீட்டைப் பெற்றிருக்கிறது. இதில் திரட்டப்படும் தொகை, தங்கள் தயாரிப்புகளை மேம்படுத்தவும் புதிய தொழில்ல்நுட்பங்களைப் பயன்படுத்தி முன்னேறவும் பயன்படுத்தப்படும் என்று ஃபினேபிள் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தில் ஏற்கனவே டிவிஎஸ் கேப்பிடல், முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம்வரை ஈட்டுவோருக்கான இணையவழிக் கடன்களை ஃபினேபிள் வழங்கிவருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு கடன்களை வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. வங்கிகளில் எளிதில் கடன்பெற முடியாத மாத சம்பளக்காரர்களைக் குறிவைத்து இந்நிறுவனம் இயங்கிவருகிறது.
-தமிழ்.





