புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி கண்காட்சி நடக்க இருக்கிறது. மார்ச் மாதம் 27-29 தேதிகளில் நடக்க இருக்கும் இந்தக் கண்காட்சியில் பல்வேறு அரசுத்துறைகள், தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றன.
வாகன உற்பத்தியாளர்கள், ஜி.பி.எஸ் சேவைகளை வழங்குவோர், இணையதள சேவை நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், மாற்று எரிசக்தி சேவை வழங்குவோர், ஸ்மார்ட் பார்க்கிங், நகர வடிவமைப்பு சேவை வழங்குவோர், சுற்றுச்சூழலுக்கு இயைந்த பொருட்கள், சேவைகளை வழங்குவோர் முதலிய பல்வேறு நிறுவனங்கள் இதில் கலந்துகொள்ள இருக்கின்றன.
இக்கண்காட்சியில் அரங்குகள் அமைப்பதற்கான முன்பதிவுகள் வரவேற்கப்படுவதாக அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். கூடுதல் தகவல்களுக்கு : +91 11 4279 5042 , 91 9899981610, prateekk@eigroup.in.