கோயம்புத்தூர், செப்.2,2025: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான ஏற்றுமதி வணிக மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய கருத்தரங்கம் செப்டம்பர் 3, 2025 (புதன்கிழமை) காலை 9.30 மணி முதல் கோயம்புத்தூர், அவாரம்பாளையம், கோ-இந்தியா அரங்கில் (CO-India Hall) நடைபெறவுள்ளது.
இந்தக் கருத்தரங்கம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி அலுவலகம் (MSME-Development & Facilitation Office (MSME-DFO)) கோயம்புத்தூர், மற்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Export Organisations -FIEO) ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
முக்கிய நோக்கம்:
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள், ஏற்றுமதி ஆவண செயல்முறைகள், சர்வதேச வணிகப் போக்குகள், அரசின் ஊக்குவிப்பு திட்டங்கள், மற்றும் உலகளாவிய போட்டித் திறனை மேம்படுத்தும் உத்திகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.
தலைப்புகள்:
-
சர்வதேச வர்த்தக அறிமுகம்(Introduction to International Trade)
-
பொருள் மற்றும் சந்தை தேர்வு(Product & Market Selection)
-
வாடிக்கையாளரை அடையாளம் காணும் முறை
(Identification of Buyers.) -
சர்வதேச போக்குவரத்து (International Logistics)
-
சர்வதேச வணிகத்தின் ஏற்றுமதி விலை நிர்ணயம் மற்றும் கட்டண முறைகள்(Export Pricing and Payment Methods in international Trade)
-
வெளிநாட்டு வர்த்தக கொள்கை (FTP)-யின் திட்டங்கள் மற்றும் நன்மைகள் (Schemes and Benefits under FTP)
-
INCO Terms
-
ஏற்றுமதியின் முன் மற்றும் பிந்தைய ஆவணப்படுத்துதல் –(Pre Shipment and Post Shipment Documentation)
-
இந்தியாவின் வணிக இணையதளம் (Indian Trade Portal)
-
ஏற்றுமதியை மேம்படுத்த அரசின் ஊக்குவிப்பு திட்டங்கள் (Government Schemes & Incentives for Export Promotion)
-
ஏற்றுமதியில் டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஈ-காமர்ஸின் பங்கு(Role of Digital Platforms and E-Commerce in Exports)
-
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உலகளாவிய போட்டித்திறன் மேம்படுத்துதல் (Building Global Competitiveness of MSMEs)
நிகழ்ச்சியில் கொள்கை நிபுணர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு முக்கியமான தகவல்களை பகிர உள்ளனர்.
பதிவு செய்ய:
பங்கேற்க விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியில் ஆர்வமுள்ளவர்கள் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு, தங்கள் வணிகத்தை உலகளவில் விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.
|
|





