அலுவலகம் தேவையா?

புதிய தொழில் முனைவோருக்கு அலுவலகம் திறப்பது என்பது கடும் சவாலாக  இருக்கும். சில  ஆயிரம்  ரூபாய்களையோ சில லட்சம் ரூபாய்களையோ முதலீடு செய்து உழைப்பை மட்டும் ஒரே நம்பிக்கையாக  கொண்டு சிறுதொழில்  நிறுவனங்கள்   தொடங்கப்படுகின்றன.

interior-design-828545__180

லட்சக்கணக்கில்   பணத்தை முன்பணமாக கொடுத்து அலுவலக இடம் பிடிப்பது சாத்தியம்  இல்லாதது. இதற்காக கடன் வாங்குவதும் நெருக்கடியை அதிகரிக்கும்.

 

இவர்களைப் போன்றவர்களுக்கு ஒரு மாற்று  இரு
க்கிறது. தமிழ்நாடு வீட்டு வசதி  வாரியம் , குடிசை மாற்று  வாரியம் முதலிய அரசு நிறுவங்கள் குறைந்த வாடகையில் வணிக மனைகளை ஒதுக்குகின்றன. விற்பனையும் செய்கின்றன.

 

சந்தை விலையை காட்டிலும் லாபமான விசயம் இது. அதேபோல சமய அற நிலையதுறையும் வணிக வளாகங்களை கட்டி வாடகைக்கு விடுகிறது. அங்கும் முயற்சிக்கலாம். சிப்காட் நிறுவனம் தொழிற்பேட்டைகளில்  உள்ள மனைகள், நலிவடைந்த  தொழிற்சாலை  மனைகளை விற்பனை செய்கிறது. அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவை தவிர இன்னும் பல நவீன வழிகளும் உண்டு. அடுத்த இதழில் இதுகுறித்து விரிவாகப் பேசுவோம்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *