சென்னை, மே 27: திட்டமிடப்பட்டபடி தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 2 ஆம் தேதி திறக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
நீண்டகால கோடை விடுமுறைக்குப்பிறகு வழக்கமாகப் பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி மறுபடி திறக்கப்படுவது வழக்கம். ஆனால், சனி-ஞாயிறு, இதர அரசு விடுமுறை நாட்கள் அத்தேதியில் வருவதாக இருந்தால் ஒன்றிரண்டு நாட்கள் கழித்து பள்ளிகள் திறக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வந்ததால் வெயிலின் கொடுமை தணிந்தபிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுவந்தன.
அதேவழியைப் பின்பற்றி இவ்வாண்டும் ஜூன் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவை வதந்திகள்தான் எனவும் திட்டமிட்டபடி ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-தமிழ்.