ரூ.7500 உதவித்தொகையுடன் போட்டித்தேர்வுக்குப் பயிற்சி: விண்ணப்பிக்க கடைசிநாள் மே 13.

ரூ.7500 உதவித்தொகையுடன் போட்டித்தேர்வுக்குப் பயிற்சி: விண்ணப்பிக்க கடைசிநாள் மே 13.

சென்னை, மே 6, 2025: தமிழ்நாடு அரசு இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அந்தவகையில் “நான் முதல்வன் திட்டம்” வாயிலாக இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு மட்டுமல்ல, போட்டித் தேர்வுகளுக்கான பயற்சி அளிப்பதிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. 

“நான் முதல்வன்”திட்டத்தின் கீழ் 2023 -ம் ஆண்டிலிருந்து போட்டித் தேர்வுகளுக்காக தனிப்பிரிவு துவங்கி ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ்  யூபிஎஸ்சி தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அவர்கள் எழுதும் தேர்வின் அடிப்படையில் தலா ரூ. 7500/- யும் , முதன்மை தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு தலா ரூ. 25000/- யும் பத்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. 

2024-25 ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணித் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து 57 பேர் தேர்வாகினர், இவர்களில் 50 பேர் ’நான் முதல்வன் உறைவிடப் பயிற்சி’  திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற்றவர்கள். 

வரும் 2025-26 ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம், ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம் (RRB) , வங்கிகள் ஆகியவற்றின் தேர்வுகளில் பங்கேற்க ’நான் முதல்வன் உறைவிட திட்டத்தின்’  கீழ் பயிற்சி வழங்கப்படுகிறது.  இந்த பயிற்சியில் பங்கேற்க நுழைவுத் தேர்வு வரும் மே- 31ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. 

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் , மே -13.

இந்த நுழைவுத்தேர்வில் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆறு மாதம் இவர்களுக்கு தீவிரப் பயிற்சியளிக்கப்படும். ஒவ்வொரு தேர்வுக்கும் தனி பயிற்சிகள் உண்டு. உணவும், தங்குமிடம் இலவசம். 

https://www.naanmuthalvan.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: 90437 10214 / 90437 10211 

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்

       

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *