5,555 மாணவர்களுக்கு திறன் பயிற்சி: நான் முதல்வன் – GUVI கூட்டாக நடத்தின.

5,555 மாணவர்களுக்கு திறன் பயிற்சி: நான் முதல்வன் – GUVI கூட்டாக நடத்தின.

சென்னை, மே 20, 2025 – சென்னை ஐஐடி மற்றும் அகமதாபாத் ஐஐஎம் நிறுவனங்களின் ஆதரவுடன் உருவான குவி ( GUVI) கல்வி நிறுவனம்  தமிழ்நாடு அரசுடன் இணைந்து ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 5,555 மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளித்துள்ளது.

இந்த பயிற்சி ‘GUVI ஹேக்கத்தான் 2025’ என்ற பெயரில் மூன்று நிலைகளில் நடந்தது:

  1. முதல் நிலை – ஆன்லைன் தேர்வு: 2,885 மாணவர்கள் கலந்து கொண்டனர் (5,555 பெரில் இவர்கள் அடக்கம்)

  2. இரண்டாவது நிலை – மேம்பட்ட ஆன்லைன் தேர்வு: 564 மாணவர்கள் போட்டியிட்டு 153 பேர் தேர்வாகினர்.

  3. மூன்றாவது நிலை – நேரடி ஹேக்கத்தான்: சென்னை, தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடந்தது. இதில் மாணவர்கள் உண்மையான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்வது போல வேலை பார்த்தனர்.

GUVI நிறுவன தலைவர் அருண் பிரகாஷ் இதுபற்றிப் பேசும்போது, “ மாணவர்கள் புத்திசாலித்தனமாக கற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஹேக்கத்தான் மூலம் அவர்கள் அனுபவத்துடன் தொழில் துறையின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தவர்களாக உருவெடுக்கின்றனர்” என்றார். அதேபோல, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் தலைவர் டாக்டர் ஜெயபிரகாசன் பேசும்போது, இந்தத் திட்டம் மாணவர்களுக்கு புத்தாக்க திறன், தொழில்நுட்ப திறன் ஆகியவற்றை வளர்க்க உதவுகிறது” என்றார். 

மாணவர்களுக்கு 45 மணி நேர பயிற்சி கொடுக்கப்பட்டது. இறுதிநிகழ்ச்சியில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி எம்.பி மற்றும் பல முக்கிய விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வில் மொத்தம் 112 மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன.

-தமிழ்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *