ஜாய் அரக்கல் மறைவு: குழப்பும் பழைய வதந்தி

ஜாய் அரக்கல் மறைவு: குழப்பும் பழைய வதந்தி

சென்னை, மே.3: இன்னோவா ரீபைனிங் அண்ட் டிரேடிங் நிறுவனத்தின் அதிபர் ஜாய் அரக்கல் கடந்த  2020 ஆம் ஆண்டில் துபாயில்  காலமானார். இது, கேரளத்திலும் வெளி நாடுகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் பழைய செய்தியை எடுத்து, தற்போது நடந்த செய்திபோலப் பலரும் சமூக ஊடகங்களில்  பரப்பத் தொடங்கியிருக்கின்றனர்.

அத்தோடு நில்லாமல், ஜாய் அரக்கல் என்ற பெயருக்கு பதிலாக, ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் உரிமையாளர் காலமானதாக இவ்வாறு வதந்தி பரப்பப்படுகிறது. இந்நிலையில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம், தங்களது உரிமையாளர் திரு.ஆலுக்காஸ் நலமுடன் இருப்பதாகவும் விஷமிகளின் செய்திகளை நம்பவேண்டாம் என்றும்  உடனேயே அந்நிறுவனம்  தெரிவித்திருந்தது.

ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 2020ல் வெளியிட்ட மறுப்பு அறிக்கை

 ஜாய் அரக்கலுக்கும் தங்கள் நிறுவனத்துக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தகவல் தெரிவித்தது.  இந்த பெயர்க்குழப்பத்தால் உருவான வதந்தியை 2020 ஆம் ஆண்டிலேயே பல இதழ்கள் குறிப்பிட்டு எழுதியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும் வதந்திகளுக்கு காலாவதி தேதி இல்லை என்பதால் அவை இணையத்தில் இன்றும் உலா வருகின்றன என்பதுதான் வருத்தமான சேதி.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

(pic courtesy: Freepik)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *